இந்திய ஆராய்ச்சியாளருக்கு சர்வதேச உணவு விருது
வாஷிங்டன்:
இந்திய தாவர-மரபியல் (பிளாண்ட் ஜெனிட்டிக்ஸ்) நிபுணர் சுரீந்தர் கே. வசாலுக்கு இந்த நூற்றாண்டின் சர்வதேசஉணவு விருது வழங்கப்பட்டுள்ளது.
இவர் மெக்சிகோவின் உயிர்வேதியியல் வல்லுனர் இவாஞ்சலீனா வில்லேகாஸ் என்பவருடன் இணைந்து புரதச்சத்து நிறைந்த, அதிக விளைச்சல் திறன் மிக்க சோளத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
இதற்காக இந்த இருவருக்கும் இவ் விருது வழங்கப்படுகிறது.
இதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் ஊட்டச் சத்து குறைவை நிவர்த்தி செய்ய முடியும் என இந்த விருதைவழங்கும் உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
பஞ்சாபில் அம்ரிஸ்தரில் பிறந்த வசாலுக்கு வயது 62. லோவாவில் டெஸ் மொயின்ஸில் வியாழக்கிழமை நடக்கும்நிகழ்ச்சியில் வசாலுக்கும் வில்லேகாசுக்கும் இந்த விருதும் 250,000 டாலர் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் மெக்சிகோவில் உள்ள சர்வேதே கம்பு மற்றும் கோதுமை மேம்பாட்டு ஆய்வுக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளில மட்டும் சோளம் உற்பத்தி குறித்து இந்தியா, சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம்,நேபாள நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார் வசால்.












Click it and Unblock the Notifications