சிறுவனைக் கத்தியால் குத்தி ரத்தம் குடித்தவர்

Subscribe to Oneindia Tamil

ஏழுமலை:

மதுரையில் அக்காவின் மகன் என்றும் பாராமல் சிறுவனை குத்தி, ரத்தத்தைக் குடித்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.

ஏழுமலை அருகேயுள்ள பொட்டலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (30). இவரது கணவர் ஜவஹர்.இவர்களுக்கு ஈஸ்வரன் என்ற 12 வயது மகன் இருக்கிறார்.

அடிக்கடி ஏற்பட்ட சச்சரவு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர். முத்துப்பாண்டி தனது பெற்றோருடன்வசித்து வருகிறார். இதற்கிடையே முத்துப்பாண்டிக்கும், அவரது தம்பியான மாரியப்பனுக்கும் இடையே தகாதஉறவு ஏற்பட்டது

சம்பவத்தன்று அவர்கள் இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்ததை சிறுவன் ஈஸ்வரன் பார்த்து விட்டான்.இதையடுத்து மாரியப்பன், ஈஸ்வரனிடம் இதுகுறித்து வேறு யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியிருக்கிறார்.

ஆனால் சிறுவன் ஈஸ்வரனோ, நான் இந்தச் சம்பவத்தைப் பிறரிடம் கூறுவேன் என்று அடம்பிடித்ததாகக்கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த மாரியப்பன் சிறுவன் ஈஸ்வரனைக் கத்தியால் குத்தினார்.ஈஸ்வரனின் குடல் சரிந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியது. குடல் சரிந்து வெளியேறிய ரத்தத்தை மாரியப்பன்குடித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துப் போலீசில் புகார் கூறப்பட்டது. இதையடுத்து மாரியப்பன் கைது செய்யப்பட்டார். படுகாயம் அடைந்தஈஸ்வரன் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+