For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலுக்குப் பின் மூன்றாவது அணி .. புதிய நீதிக்கட்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்குப் பின், மூன்றாவது அணி அமைக்க புதிய நீதிக்கட்சி அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கட்சி நிறுவனர் மற்றும் முன்னாள் எம்.பி.ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், டான்சி ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 3 வருடக் கடுங்காவல் சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பஸ் எரிப்பு, சாலை மறியலில் ஈடுபட்ட பல தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா தவறு செய்ததற்கு அவரது தொண்டர்கள் பலர் சிறைக்குச் சென்றுள்ளனர். தவறான தலைமையால்இன்று அதிமுக வுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தண்டனை, மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பிறஅரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம்.

மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்தியது. இதை எதிர்த்துகருணாநிதி குரல் கொடுக்கவில்லை. இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களைப் பெரிதும்பாதித்துள்ளது. இந்த மக்கள் விரோதக் கொள்கையால் திமுக அரசு மீது, மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.ஆதரவாளர்கள் எங்கள் கட்சியில் சேர்ந்தால் அதை நாங்கள்மகிழ்ச்சியுடன் வரவேற்போம். நாங்கள் அதிமுக வுடனோ அல்லது திமுக வுடனோ கூட்டு சேர மாட்டோம்.

மத்திய அரசின் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து நாங்கள் வரும் அக்டோபர் 14 ம் தேதி 110தாலுக்காக்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றார் சண்முகம்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X