கபில் மீதான புகாருக்கு ஆதாரம் இல்லை?
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மீது கூறப்பட்ட மேட்ச்பிக்ஸி ஊழல் புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சி.பி.ஐ. முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தியில், மேட்ச்பிக்ஸிங் தொடர்பான சி.பி.ஐயின் இடைக்கால அறிக்கை தயாராகி விட்டது. இதில்,மூன்று அல்லது நான்கு வீரர்கள் வரை குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் டூர்மேற்கொண்டிருந்தபோது மேட்ச் பிக்ஸிங் புகார்கள் வெடித்தன. இதையடுத்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையை 5 மாதத்தில் சி.பி.ஐ. முடித்துள்ளது.
இந்த சமயத்தில், 1994-ம் ஆண்டு இலங்கையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்தசிங்கர் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது மோசமாக விளையாடுவதற்காக ரூ.25 லட்சம் பணம் தர கபில் தேவ் முன்வந்ததாக பந்துவீச்சாளர் மனோஜ் பிரபாகர் புகார்கூறினார்.
பிரபாகரின் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கபில் தேவ், டி.வி. பேட்டியில்கண்ணீர் விட்டார். தனது புகாரை மறுத்தார். தொடர்ச்சியாக அணி பயிற்சியாளர்பொறுப்பிலிருந்தும் விலகினார். இதுகுறித்தும் சி.பி.ஐ. விசாரித்தது. தற்போது இந்தப்புகாருக்கு உரிய ஆதாரம் இல்லை என்று சி.பி.ஐ. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகத்தெரிகிறது.
யு.என்.ஐ