ஒரு மலைப்பகுதி சிரித்தால்...

Subscribe to Oneindia Tamil

மலர்களில் குறிஞ்சி மலர் அபூர்வமானது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இந்த மலர் பூத்துக் குலுங்கும்.

இதிலும் அரியது மினியேச்சர் வரை குறிஞ்சிப் பூ. இந்த அரியவகை குறிஞ்சிப்பூ இப்போது நீலகிரியில் பூத்துக்குலுங்குகிறது. இதனால் நீலகிரி மலையே தனிக் கவர்ச்சி பெற்றுள்ளது.

சங்க இலக்கியங்களில் மலையும் மலை சார்ந்த இடத்தை குறிஞ்சி நிலம் என்று அழைக்கப்பட்டது. மலைகளில் இந்தமலர்கள் அபூர்வமாக மலர்வதால், இந்த மலர்களின் பெயரிலேயே மலைப் பகுதிகளையும் அழைத்து தமிழ்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர், மிதமான வெப்பநிலை நிலவும் பகுதிகளில் மலர்வதுண்டு.குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் குறிஞ்சிப் பூ பூத்துக் குலுங்கும்போது மலைப் பகுதிகள் கவர்ச்சிஅடைகின்றன.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் இந்தப் பூக்களைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் குவிந்துவருகின்றனர்.

குறிஞ்சிப் பூவில் 29 வகைகள் உள்ளன. ஒரு வகை மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வதைப் போல 8, 6,3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சில வகை குறிஞ்சிப் பூக்கள் மலர்வதுண்டு என்கின்றனர் தாவரவியல்ஆராய்ச்சியாளர்கள்.

குறிஞ்சிப் பூக்களிலும் வண்ணப் பூக்களும் உண்டு.

நீலகிரி மலையில் மலரும் இரண்டு வகை குறிஞ்சிப் பூக்களில் சிறிய வகைக் குறிஞ்சிப் பூக்களை "மினியேச்சர்குறிஞ்சி என அழைக்கின்றனர். இவற்றை இந்தப் பகுதி மக்கள் சோழா குறிஞ்சி மற்றும் கட்டசொப்பு எனவும்அழைக்கின்றனர்.

நீலகிரி மலைப் பகுதிகளில் இந்த குறிஞ்சிப் பூக்கள் இந்த ஆண்டு சின்னக் குன்னூர் என்ற இடத்தில் மலர்ந்துள்ளன.இவை பாசி படிந்த இடங்களில் அதிக அளவு மலரத் தொடங்கியுள்ளன.

வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இந்த குறிஞ்சிப் பூக்கள் மலர ஏதுவான தட்ப வெப்பநிலை அமையும்.

ஆனால் செப்டம்பர் மாதத்திலேயே குறிஞ்சி பூப்பதற்கு ஏற்ற வெப்பநிலை நிலவ ஆரம்பித்ததால் மலர்கள்இப்போதே பூத்துக் குலுங்கத் தொடங்கி விட்டன.

டிசம்பர் மாதம் வருகையில் இந்த மலைப் பகுதிகள் முழுவதுமே குறிஞ்சி பூக்க ஆரம்பித்துவிடும் என்கின்றனர்ஆராய்ச்சியாளர்கள்.

தற்போது பூத்துக் குலுங்கும் மினியேச்சர் வகை குறிஞ்சி இலையின் நீளம் 3 செ.மீயாகவும் அகலம் 1.5செ.மீயாகவும் உள்ளது. எதிர் எதிர் அடுக்ககாக இருக்கும் இம்மலர்களால் நீலகிரி மலையே சிரிப்பது போல்உள்ளது.

மலைகளில் நீரோடைகள் நிறைந்த இடங்களில் இந்த மலர்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதனால்இப்பகுதியே வயலெட் கலருக்கு மாறி இருக்கிறது.

இந்த மினயேச்சர் ரக குறிஞ்சி ப் பூக்கள் கடந்த 1908ம் ஆண்டில் தான் மலர்ந்தன. அதற்குப் பின் பிற வகைகுறிஞ்சிப் பூக்கள் பூத்தாலும் இந்த மலர்கள் பூக்கவில்லை. இப்போது இந்த அரிய மலர்கள் மீண்டும் இந்த மலைப்பகுதியை எட்டிப் பார்த்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+