இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் சித்திரவதை
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
இலங்கை சிறையில் ராணுவ வீரர்கள் சிகரெட்டால் சுட்டும், அடித்தும்கொடுமைப்படுத்தியதாக அங்கிருந்து விடுதலையாகி தாயகம் திரும்பிய தமிழகமீனவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை கடற்படை வீரர்களால் பிடிக்கப்பட்டு சிறையில் இருந்த ஐந்து தமிழகமீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அனைவரும் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில்அழைத்து வரப்பட்டு அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விடுதலையான மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படை வீரர்களால்பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நாங்கள் பலவிதமான சித்ரவதைகளுக்குஆளானோம்.
சிறையில், ராணுவ வீரர்கள் எங்களை துப்பாக்கியால் அடித்தும், சிகரெட்டால் சுட்டும்கொடுமைப்படுத்தினர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications