For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நள்ளிரவில் காவல் நிலையத்தில் நடந்த கல்யாணம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

சிவகங்கை மாவட்டம் ஆறாவயல் என்ற கிராமத்தில், கர்ப்பிணிப் பெண்ணுக்கும்,அவரது காதலனுக்கும் போலீஸ் நிலையத்தில் நள்ளிரவில் திருமணம் நடந்தது.

தேவகோட்டை அருகே உள்ளது இந்த கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சாந்தி (22).சாந்தி வீட்டுக்கு அருகே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த வாலிபர்மாயத் தேவர் வசித்து வந்தார்.

மாயத்தேவரும், சாந்தியும் காதலிக்கத் துவங்கினர். இவர்களது காதல் வளர்ந்து. அதேசமயம், இருவரது ஜாதியும் வித்தியாசப்பட்டதால், எதிர்ப்பும் எழுந்தது. இந்தநிலையில் சாந்தி கர்ப்பம் தரித்தார்.

கர்ப்பமானதால், தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுமாறு மாயத்தேவரை சாந்தி வற்புறுத்தினார். இந்தச் சூழ்நிலையில் இருவரும் தனிமையில்இருந்தபோது, ஊர் மக்களிடம் சிக்கிக் கொண்டனர்.

இருவரையும், கிராமத்து மக்கள் டி.எஸ்.பி பாண்டியனிடம் ஒப்படைத்தனர். அவர்நடத்திய விசாரணையில் சாந்தியின் காதல் தெரிய வந்தது. உடனடியாக ஆறாவயல்கிராம சப் இன்ஸ்பெக்டர் கதிரேசனிடம் இந்த விவகாரத்தைக் கவனிக்குமாறு கூறினார்.

இதையடுத்து இருவரது பெற்றோரும் அழைக்கப்பட்டு பேச்சு நடந்தது. இதில் சாந்தி,மாயத் தேவருக்குக் கல்யாணம் செய்து வைக்க சம்மதம் கிடைத்தது. இதையடுத்துபோலீஸ் நிலையத்திலேயே, நள்ளிரவிலேயே திருமணம் நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X