பாகிஸ்தானில் இந்துக் கோவில், வீடுகளுக்குத் தீவைப்பு
கியோட்டா (பாகிஸ்தான்):
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில்உள்ள தால்பன்டின் பகுதியில் மாமிசத் துண்டுகளை இந்துப் பெண் ஒருவர் பாடப் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட தாளில்சுற்றி கொடுத்தால், ஆத்திரமடைந்த ஒரு கும்பல் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில் மற்றும் வீடுகளுக்குத் தீ வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்துஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சில மாமிசத் துண்டுகளை பாடப்புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட தாளில் சுற்றிக்கொடுத்துள்ளார்.
முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் அவர் இவ்வாறு செய்ததால், அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லீம்கள் வன்முறையில் இறங்கினர். சிறுபான்மை இந்துக்கள்வசிக்கும் வீடுகளுக்குத் தீவைத்தனர். கோவில் ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது.
உடனடியாக எல்லைப் பாதுகாப்புப் போலீஸ் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கலவரத்தை அடக்கினர். இதுதொடர்பாக,4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications