For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூஸ் வீக் ஆசிரியராக இளம் இந்தியர் நியமனம்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

சர்வதேச ஆங்கில வார இதழான நியூஸ் வீக் செய்தி ஆசிரியராக இந்தியரான பரீத் சகாரியா (வயது 35)நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளாக இவர் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பாரின் அபையர்ஸ் இதழின் நிர்வாகஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் நியூஸ் வீக் இதழுக்கும் தொடர்ந்து எழுதி வந்தார்.

உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் கரைத்துக் குடித்த அதி புத்திசாலி இவர் என்கிறார் இப்போது அதிபர்தேர்தலில் போட்டியிடும் ஜார்ஜ் புஷ்ஷின் ஆலோசகரான கோண்டோலெஸ்சா ரெய்ஸ்.

அவர் விலகிச் செல்வது தங்களுக்கு மிகப் பெரிய இழப்பு என்கிறார் பாரின் அபையர்ஸ் இதழின் நிறுவனம். 1993ம்ஆண்டில் 28 வயதிலேயே பாரின் அபையர்ஸ் இதழின் ஆசிரியரானவர் என்ற பெருமையும் பரீதுக்கு உண்டு.

1997ம் ஆண்டில் இவர் அந்தப் பத்திரிக்கையில் எழுதிய தாராளயமயமான ஜனநாயகயங்கள் என்ற கட்டுரைக்குதேசிய விருதும் கிடைத்தது.

இவரது தந்தை மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். இந்திரா காந்தியின்நெருங்கிய நண்பர்களில் ஒருவராக விளங்கியவர். இவரது தந்தை பாத்திமா சகாரியா டைம்ஸ் ஆப் இந்தியாவின்,சண்டே டைம்ஸ் ஆசிரியராக இருந்தவர்.

பரீத் சகாரியா ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பும் அரசியல் விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டமும்பெற்றவர்.

கடந்த ஆண்டு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட கட்டுரையில் பரீதை மிகவும் பாராட்டியிருந்தது.இந்தியாவைச் சேர்ந்த இவர் ஒரு நாள் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளரானாலும்ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று இவரைப் பற்றி அந்தக் கட்டுரையில் வர்ணித்திருந்தது.

நியூயார்க்கைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளரான பெளலா த்ரோக் மோர்ட்டனை திருமணம் செய்துள்ளசகாரியாவுக்கு 15 மாத கைக் குழந்தை உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X