பாஸ்போர்ட் சட்டம் கடுமையாகிறது: தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அன்னிய நாடுகளில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் பாஸ்போர்ட்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாஸ்போர்ட் சட்டம் 33 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் திருத்தப்படுகிறது.
புதிய திருத்தம் அமலுக்கு வந்தால், சந்தேகத்துக்கு உரிய நபரின் பாஸ்போர்ட்டை மத்திய, மாநில அரசுகளால்வாபஸ் பெற முடியும். மேலும் அவரது வெளிநாட்டு பயணத்தையும் நிறுத்த முடியும்.
அதே போல ஒரே நபர் பல்வேறு அலுவலகங்களில் பல்வேறு பெயர்களில் பல பாஸ்போர்ட் பெறுவதைத் தடுக்கபுகைப்படத்தை அடையாளம் காணும் கருவிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒரே நபர் இரு வேறு அலுவலகங்களில்பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் இந்தக் கருவி காட்டிக் கொடுத்துவிடும்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications