காத்திருந்து .. காத்திருந்து ...
டெல்லி:
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்னாள்பிரதமர் நரசிம்மராவுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பின் அவரை சிறைக்கு அழைத்துச்செல்லக் காத்திருந்த போலீஸார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நரசிம்மராவுக்கும், பூட்டாசிங்குக்கும் தண்டனை அளிக்கப்பட்டால் அவர்களை கைதுசெய்து, திக்ரி என்ற இடத்திலுள்ள இந்திய- திபெத் எல்லைப் பகுதி போலீஸ்முகாமிற்கு அழைத்துச் செல்ல விஞ்ஞான் பவன் அருகே நரேஷ்குமார்தலைமையிலான டெல்லி ஆயுதப் படை போலீஸின் மூன்றாவது பட்டாலின் பிரிவுபோலீசார் தயாராக இருந்தனர்.
ஆனால் ராவுக்கும், பூட்டா சிங்குககும் சிறை தண்டனை வழங்கப்பட்டாலும் அவர்கள்மேல் முறையீடு செய்ய வசதியாக, ஜாமீன் வழங்கப்பட்டதால், காத்திருந்த போலீசார்வெறும் கையுடன் திரும்பினர்.
ராவுக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் முன்னாள் பிரதமர் என்ற முறையில் இன்னும்அவருக்கு சிறப்பு பாதுகாப்புப்படையின் பாதுகாப்பு வழங்கப்படுதிறது
யு.என்.ஐ.
லஞ்சம் வாங்கிய வழக்கில் நரசிம்மராவுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை












Click it and Unblock the Notifications