18-ம் தேதி முதல் கல்கத்தா டூ டாக்கா பஸ் மீண்டும் ஓடும்
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
மேற்கு வங்கத் தலைநகரான கல்கத்தாவிற்கும் வங்கதேசத் தலைநகரானடாக்காவிற்கும் இடையிலான பஸ் போக்குவரத்தது இம்மாதம் 18-ம் தேதி முதல்தொடங்கும்.
வங்கதேசத்துக்கும், இந்தியாவிற்கும் இடையேயான பஸ் போக்குவரத்து 1999-ம்ஆண்டு ஜுலை மாதம் 5-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. பயணிகள் போக்குவரத்துஜுலை 9-ம் தேதியிலிருந்து துவக்கப்பட்டது.
வங்கதேசத்தின் மேற்கு மற்றும் தென் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம்காரணமாக செப்டம்பர் மாதம் 25-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
வெள்ள நிலைமை சீரடந்திருப்பதைத் தொடர்ந்து மீண்டும் பஸ் போக்குவரத்துதுவக்கப்பட உள்ளது. வங்கதேச பஸ் போக்குவரத்துத் துறை நிர்வாக இயக்குனர்ரமேஷ் கோஷ், புதன் கிழமை முதல் பஸ் போக்குவரத்து துவக்கப்படும் என கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications