அபராதத் தொகை கட்டாத தினகரனுக்கு கோர்ட் சம்மன்
சென்னை:
அ.தி.மு.க. எம்.பி. தினகரனை அடுத்த மாதம் 3-ம் தேதி கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
அ.தி.மு.க. எம்.பி. யாக இருப்பவர் டி.டி.வி தினகரன். இவர் வெளிநாட்டில் இருந்து 61ஆயிரத்து 313 டாலர் பணம் வந்தது தொடர்பாக அவர் மீது அன்னிய செலாவணிவழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அவருக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தஅபராதத் தொகையை குறைக்க வேண்டும் என தினகரன் கோரிக்கை விடுத்தார்.அதனால் அபாராதத் தொகை 28 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.
ஆனாலும் அபராதத் தொகையை தினகரன் கட்டவில்லை. இதனால் பொருளாதாரகுற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் சென்னை எழும்பூரில் உள்ளகுற்ற்ப்பபிரவு நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இதைத் தொடர்ந்து கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் வெங்கடேசபெருமாள் வழக்ககை விசாரித்து தினகரன் அடுத்தமாதம் 3-ம் தேதி கோர்ட்டில்ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்துதினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.