ஜப்பான் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றது பயஸ்- பூபதி ஜோடி
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பட்டத்தை இந்தியாவின்லியான்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி வென்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி 6-4, 6-7, 6-3 என்றசெட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹில் மற்றும் அமெரிக்காவின் ஜெஃப்தராங்கோ ஜோடியைத் தோற்கடித்தது. இந்த ஆட்டம் 2 மணி 15 நிமிடங்கள் நடந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய ஜோடி வென்றுள்ள பெரிய பட்டம் இதுவாகும்.கடந்த ஆண்டு 2 கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டங்களை வென்றதுமட்டுமல்லாமல் மேலும் 2 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் இந்தியஜோடி விளையாடியது.
சிறப்பான ஆட்டத்தினால், உலகின் முதல் நிலை இரட்டையர் ஜோடி என்றபெருமையை லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும் பெற்றனர். ஆனால், அதன்பிறகுகருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இருவரும் தனித்தனியாக வேறுநபருடன் ஜோடி சேர்ந்து விளையாடினர்.
இந் நிலையில், மீண்டும் அவர்களை ஜோடி சேர்ந்து விளையாட வைக்க பலர்முயற்சிகளை மேற்கொண்டனர். இதையடுத்து இந்த ஆண்டிலிருந்து இருவரும் சேர்ந்துவிளையாடுவது என்று முடிவு செய்தனர். சமீபத்தில் நடந்த சிட்னி ஒலிம்பிக்போட்டியிலும் இருவரும் ஜோடி சேர்ந்தனர். ஆனால், இரண்டாவது சுற்றிலேயேதோற்றுவிட்டனர்.
இப்போது ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பட்டத்தை வென்றுதங்களது திறமையை இந்திய ஜோடி மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த ஜப்பான் ஓபன்டென்னிஸில் இந்திய ஜோடி தொடர்ந்து 5-வது வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் 250 புள்ளிகள் இந்திய ஜோடிக்குக் கிடைத்தது. மேலும், மீண்டும்இரட்டையர் டென்னிஸ் பிரிவில் முதல் 50 இடங்களில் ஒரு இடத்தைப் பெறும்நிலைக்கு இந்திய ஜோடி உயர்ந்துள்ளது.
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்ற இந்திய ஜோடிக்குப் பரிசுத்தொகையாக ரூ.20 லட்சம் கிடைத்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications