உஷார் நிலையில் கர்நாடக போலீஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கன்னட நடிகர் ராஜ்குமார் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30க்கு மேல் எப்போதுவேண்டுமானாலும் விடுதலையாகலாம் என்ற புதிய சூழ்நிலை எழுந்துள்ளதால்,கர்நாடகத்தில் ராஜ்குமார் ரசிகர்கள் மகிழ்ச்சியில் வன்முறையில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால் கர்நாடக போலீஸ் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

ராஜ்குமார் கடத்தல் விவகாரம் முடிவுக்க வரும் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.காட்டுக்குள்ளிருந்து நெடுமாறன் தனது அலுவலகத்திற்கு அனுப்பிய செய்தியில்ராஜ்குமார் விடுதலை பிரகாசமடைந்துள்ளது என்று கூறியிருக்கிறார்.

எனவே ராஜ்குமார் எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு இரு மாநிலங்களிலும்எழுந்து விட்டது. கோவை வழியாக சென்னை சென்று பின்னர் பெங்களூருக்குராஜ்குமார் அழைத்து வரப்படுவார் என்று கர்நாடக மாநில மூத்த போலீஸ் அதிகாரிஒருவர் கூறியுள்ளார்.

போலீஸ் உஷார்:

இதற்கிடையே, ராஜ்குமார் விடுவிக்கப்பட்டால், அவரது ரசிகர்கள் அசம்பாவிதச்செயல்களில் ஈடுபடலாம் என்று கருதப்படுகிறது.எனவே காட்டிலிருந்து வெளியேவருவதற்கு முன்பே, கன்னட மக்கள் எந்தவித அசம்பாவிதச் சம்பவத்திலும் ஈடுபடக்கூடாது என்று ராஜ்குமார் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்றும் அந்த போலீஸ்அதிகாரி கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+