ஊர்க்காவல் வீரர் மாயம் .. சி.பி.ஐ. விசாரணை துவங்கியது
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் கடந்த ஆண்டு ஊர்க்காவல் படை வீரர் சுப்பராயலு காணாமல்போனது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. துவங்கியது.
சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர்கள் கலைமணி, ராவ் அடங்கிய சி.பி.ஐ. விசாரணைக் குழுபாண்டிச்சேரியில் சனிக்கிழமை தனது விசாரணையைத் துவக்கியது.
சுப்பராயலு, கடந்த ஆண்டு ஆட்சியில் இருந்த முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன்அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் பணியில் இருந்தார். இந்தநிலையில் 1999-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி முதல் அவரைக் காணவில்லை.
இதையடுத்து சுப்பராயலுவின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால்போலீஸ் புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து பாண்டிச்சேரி போலீஸ் உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறும், அதன் பின்னர் சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைத்தும்உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications