Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதி போக்கு .. சங்கடப்படுகிறார் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

வாழப்பாடியை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து நீக்கும் அதிகாரம்இருந்தாலும், கருணாநதி கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். இது என்னை மனச்சங்கடத்திற்குள்ளாக்கி வருகிறது என ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்ராமதாஸ் தெரிவித்தார்.

ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

தேர்தல் முடிந்த கையோடு வாழப்பாடி ராமர்த்தி தொடர்ந்து என்னைத் தாக்கிப் பேசிவருகிறார். இது தொடர்பாக டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டத்திலேயேபுகார் தெரிவித்தேன். இந்த மோதல் விவகாரம் குறித்து தமிழகத்தில் ஜனநாயகக்கூட்டணித் தலைவராக உள்ள முதல்வர் கருணாநிதியிடம் மூன்று முறை நேரில் சந்தித்துபுகார் கூறினேன்.

இரண்டு பேரையும் அழைத்துப் பேசிய அவர், இனி ராமமூர்த்தி, தாக்கிப் பேசமாட்டார் என உறுதிமொழி அளித்தார். ஆனால் இதன் பின்னரும் ராமமூர்த்தி தாக்கிப்பேசி வந்தார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் வாழப்பாடிராமமூர்த்தி கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவர் கூட்டணியில் உள்ளாரா,இல்லையா என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும் என தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அக் கூட்டத்திலேயே என்னைத் தாக்கிப் பேசினால், கூட்டணியிலிருந்து நீக்கும்அதிகாரம் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. இதனை கூட்டத்தில் கலந்து கொண்டஅனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். இதன் பின்னரும் வாழப்பாடிஎன்னைத் தாக்கிப் பேசி வந்தார்.

இதனை முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, அவர் வாழப்பாடியைஅழைக்காமலேயே ஒரு கூட்டத்தைக் கூட்டி, அவரை நீக்கியதாக அறிவிக்கலாம் எனக்கூறினார். இந்தக் கூட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. ஆனால் கூட்டம்கூட்டப்படவில்லை.

மோதலின் உச்சக்கட்டமாக மூன்று எம்.பி. இடங்களுக்கு ரூ.2.5 கோடி கேட்டதாகவாழப்பாடி கூறியுள்ளார். இது உளறலின் உச்சக் கட்டமாக உள்ளது. இப்போது தேசியஜனநாயகக் கூட்டணியின் தலைவர் நான் இல்லை என முதல்வர் கூறுவது எந்தவகையிலும் நியாயமும் இல்லை.

இது என்னை மனச் சங்கடத்திற்கு ஆளாக்கி வருகிறது. எனவே, இந்த நியாயத்தைமுதல்வரின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

பா.ம.கா. அனைத்து மாவட்டங்களிலும் சீரான வளர்ச்சி பெற்று வருகிறது. இதனைப்பொறுக்க முடியாமல், அரசு எங்கள் மீது பொய் வழக்குப் போடுகிறது. பொதுச்சொத்துக்களுக்கு நாசம் விளைவிப்பதாகக் கூறி ஒன்றிய அளவில் உள்ள எங்களதுதொண்டர்களையும் நிர்வாகிகளையும், கட்சிப் பெயர் இன்றி சிறையில்தள்ளுகின்றனர்.

எங்களைப் பொறுத்தவரை இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்துவருகிறோம். சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் எங்களது நிலை குறித்துஅறிவிப்போம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+