சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர்
நைரோபி:
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைஇந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் பெற்றார்.
கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட்போட்டித் தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்ககு எதிரான இறுதிஆட்டத்தில் அவர் இச் சாதனையைப் புரிந்தார்.
நியூசிலாந்து வீரர் ஓ கானர் வீசிய ஒரு பந்தை பவுண்டரிக்கு அடித்து தனது ரன்எண்ணிக்கையை 13 -ஆக உயர்த்தியபோது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதன் மூலம் மற்றொரு இந்திய வீரரான முகம்மது அசாருதீனின் சாதனையான 9,378ரன்கள் என்ற சாதனையை அவர் முறியடித்தார். அசாருதீன் 334 இன்னிங்ஸில்விளையாடி 9378 ரன்கள் எடுத்தார்.
ஆனால், சச்சின் டெண்டுல்கர் தனது 246-வது இன்னிங்ஸிலேயே அச் சாதனையைப்புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட்டில் மற்றொரு சாதனையையும் சச்சின் டெண்டுல்கர் புரிந்துள்ளார்.ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்து அவர் சாதனை புரிந்துள்ளார். அவர்மொத்தம் 25 சதங்கள் அடித்துள்ளார்.