பெட்ரோல் விலை உயர்வு .. அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திங்கள் கிழமைஅ.தி.மு.க. வினர் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
பெட்ரோல், டீசல், சமையல் வாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கடந்த 13ம்தேதியே அ.திமு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,9-ம் தேதி டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானதை அடுத்துஅ.தி.மு.க.வினர் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக 13-ம் தேதி போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், டான்சிதீர்ப்பு காரணமாக அ.தி.மு.க வட்டாரம் செயலிழந்து விட்டது என்ற செய்தி பரவவே,தள்ளி வைக்கப்பட்ட போராட்டத்தை 16-ம் தேதி நடத்துவதாக ஜெயலலிதா மீண்டும்அறிவித்தார்.
அதன்படி தமிழகத்தில் திங்கள் கிழமை காலை பல்வேறு அரசு அலுவலகங்களில் இந்தஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இருந்து அ.தி.மு.க.மகளிரணிச் செயலாளர் சுலோச்சனா சம்பத் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள்ஜெயக்குமார், மதுசூதனன் உள்ளிட்டோர் ஊர்வலாக சென்றனர்.
எழும்பூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய, மாநிலஅரசுகளை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.