மதுரை, திருச்சியை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மதுரை, திருச்சி உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களை கலாச்சார மையமாக்கமேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மதக்திய நகர்ப்புள வளர்ச்சித் துறை அமைச்சர் ஜக்மோகன் டெல்லியில் இத்தகவலைத்தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த நகர்ப்புற வளர்ச்சி குறித்த இந்திய-ஐரோப்பிய மாநாட்டைத்துவக்கி வைத்து ஜக்மோகன் பேசுகையில், மதுரை, திருச்சி தவிர, வாரணாசி,துவாரகை, கோனாரக் ஆகிய நகரங்களும் கலாச்சார பாரம்பரிய மிக்க நகரங்களாகஅறிவிக்கப்படும். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய இந்த நகரங்களை எதிர்கால சந்ததியினர் தெளிவுறஅறிந்து கொள்ளும் வகையில், சீரமைப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தில் ஹைதராபாத், பூரி, உஜ்ஜைனி ஆகிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தநகரங்களும் சேர்க்கப்படும்.

இந்த நகரங்களின் புராதன சின்னங்கள், கட்டடங்கள் சீரமைக்கப்படும். இந்தநகரங்களின் கலாசார பின்னணி பாதுகாக்கப்படும். இந்த நகரங்களுக்கு தானாகவேசுற்றுலா பயணிகள் வருவர். இருப்பினும் சீரமைத்து, மேம்படுத்தினால் இந்தஎண்ணிக்கை அதிகரிக்கும்.

வைஷணவா தேவி கோவில் புனரமைக்கப்பட்ட பின் அங்கு வரும் பக்தர்களின்எண்ணிக்கை 3 லட்சத்திலிருந்து 5 லட்சத்தை எட்டியுள்ளது. எனவே இந்தநகரங்களுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

இந்தியாவில் நகரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் ஜக்மோகன்தெரிவித்தார். 1951-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 2500 நகரங்கள்இந்தியாவில் இருந்தன. இது கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 3200 ஆகஉயர்ந்தது என்றார் அவர்.

யு.என்.ஐ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+