For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவூ (இந்தியா) நிறுவனத் தலைவர் அவஸ்தி ராஜினாமா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தேவூ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ஷிவ் கோபால்அவஸ்தி திங்கள்கிழமை ராஜினாமா செய்தார்.

ஆட்டோமொபைல் தொழிலில் கடந்த 16 ஆண்டுகளாக நான் பணியாற்றிவிட்டேன்.என்னைப் பொறுத்தவரை நான் என் பணியைச் சிறப்பாக செய்ததாகவே கருதுகிறேன்என்றார் அவஸ்தி.

எனது ராஜினாமாவுக்கு குறிப்பிட்ட காரணம் எதையும் கூறமுடியாது. தேவூநிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்யமுடியாது என்று தோன்றியது. ராஜினாமாசெய்து விட்டேன்.

தேவூ நிறுவனத்துக்காக நான் பல பணிகளை ஆற்றியுள்ளேன். தேவூ நிறுவனத்துக்கும்டிசிஎம் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட நான் காரணாக இருந்தேன்.மேலும், இந்தியாவில் ஒரு சிறந்த மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனம் என தேவூநிறுவனத்தை உயர்த்தினேன்.

இப்போது தேவூ நிறுவனத்தை விட்டு விலக நேரம் வந்துவிட்டதாகக் கருதினேன்.ராஜினாமா செய்துவிட்டேன். அவ்வளவுதான் என்றார் அவஸ்தி.

ராஜினாமா செய்துவிட்டாலும், அக்டோபர் மாதம் இறுதி வரை தலைவர் பதவியில்அவஸ்தி தொடருவார் என்று அந் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் பி.எஸ்.மின் தெரிவித்தார்.

அவஸ்தி ராஜினாமா செய்துவிட்டதை அடுத்து தென் கொரியாவில் உள்ள தேவூநிறுவன தலைமையக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக நவம்பர் 3-ம்தேதி மின் தென் கொரியா செல்கிறார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X