எனக்கு ஒன்றும் தெரியாது .. கர்நாடக முதல்வர்
Subscribe to Oneindia Tamil
தார்வாட்:
நடிகர் ராஜ்குமார் விடுதலை குறித்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்று கர்நாடகமுதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
நடிகர் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும்,அவர் சென்னைக்கு சென்றுகொண்டிருப்பதாகவும் பெங்களூரில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், ராஜ்குமார் விவகாரம் குறித்து தார்வாட் சென்றுள்ள கிருஷ்ணா கூறுகையில்,ராஜ்குமார் விடுதலை குறித்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை.
மாநில காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரத்தைக் கவனித்துவருகிறார். அவருக்கும், எந்தத் தகவலும் வரவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக இப்போதைக்கு சென்னை செல்லும் திட்டம் என்னிடம்இல்லை என்றார் கிருஷ்ணா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications