காஷ்மீரில் சண்டை: 8 தீவிரவாதிகள், 3 ராணுவத்தினர் சாவு
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும்இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.
மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சண்டைகளில் 3ராணுவத்தினரும், 8 தீவிரவாதிகளும் இறந்தனர்.
பூன்ச் பகுதியில் தாட்வாலி என்ற இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவஅதிகாரி உள்பட 3 ராணுவத்தினர் பலியானார்கள்.
இச் சம்பவத்தை அடுத்து தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்புப்படையினர் முடுக்கிவிட்டனர். இதையடுத்து, உத்தம்பூர் மாவட்டத்தில் மாஹோர் என்றஇடத்தில் நடந்த சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஜெய்ஷ்-இ-மொகம்மது என்ற தீவிரவாத இயக்கத்தைச்சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் தீவிரவாதிகளால்ஆப்கானிஸ்தான் நாட்டுக்குக் கடத்தப்பட்டது.
விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று இந்திய சிறையில்அடைக்கப்பட்டிருந்த ஹர்கத்-உல்-அன்சார் என்ற தீவிரவாதி விடுவிக்கப்பட்டார்.
அந்த ஹர்கத்-உல்-அன்சார் என்பவர்தான் ஜெய்ஷ்-இன-மொகம்மது என்றஇயக்கத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூன்ச் மாவட்டத்தில் நுன்கேல் பகுதியில் நடந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகளம்,ராஜோரி மாவட்டத்தில் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்தனர்.
கடந்த ஒன்றரை மாதங்களாக தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கையை பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். பாதுகாப்புப் படையினரின் இந் நடவடிக்கையால்ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல பகுதிகளில் 100-க்கும் அதிகமான தீவிரவாதிகள்கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications