நடுவானில் மோதிக் கொண்ட போர் விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அஸ்ஸாம் மாநிலத்தில் நடு வானில் இரண்டு மிக்-21 ரக போர் விமானங்கள் மோதிக்கொண்டன. இதில் ஒரு விமானி உயிரிழந்தார்.
தாரங்-சோந்திபூர் மாவட்டங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்தது. விபத்தில்பிளையிங் ஆபிசர் ஜோத்சிங் இறந்தார். இன்னொரு விமான பாராசூட் மூலம் குதித்துஉயிர் தப்பினார். திங்கள்கிழமை பிற்பகல் இந்த விபத்து நடந்தது.
இன்னொரு விமானத்தின் விமானியின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.தேஸ்பூர் விமானப்படை தளத்திலிருந்து இரு போர் விமானங்களும் பயிற்சிக்காககிளம்பின. சிறிது நேரத்திலேயே இரண்டு விமானங்களும் மோதிக் கொண்டன.
இரு விமானங்களும் தாரங் மாவட்டத்தில் பேகம்பரி பகுதியில் மோதி விழுந்தன.சம்பவம் இடத்திற்கு விமானப்படை அதிகாரிகளும், பிற அதிகாரிகளும்விரைந்துள்ளனர்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications