ஏவுகணைகளை நிலை நிறுத்த புதிய இடங்களை தேடும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
தனது அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகளை நிறுத்தி வைக்க வசதியான இடங்களை பாகிஸ்தான் ராணுவம்அடையாளம் கண்டு வருகிறது. நாடு முழுவதும் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் அணு ஆயுதப் பிரிவின் தலைவர் டாக்டர் காதிர் கான் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அணுஆயுதங்களைக் கையாள தேசிய கமாண்ட் கவுன்சில் கடந்க பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது.
அணு ஆயுத உற்பத்தி, திட்டமிடுதல், ஏவுகணைத் தாக்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அணு ஆயுதங்கள்ஏவுவதற்கான கட்டமைப்பை இந்த கவுன்சில் உருவாக்கும்.
எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்குத் தேவையான அணு ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன என்றார் கான்.
இது தவிர பாதுகாப்பு ஆராய்ச்சிப் படைப் பிரிவையும் பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது. ஏவுகணைகளை எங்கு நிறுத்தவேண்டும், எப்போது ஏவ வேண்டும் போன்றவற்றை இந்தப் பிரிவு தான் முடிவு செய்யும்.
பாகிஸ்தானிடம் ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் திறன் மிக்க கோரி, சகீன்-1, சகீன்-2 ஆகிய ஏவுகணைகள் உள்ளன












Click it and Unblock the Notifications