ரஜினி வீட்டில் ராஜ்குமார் குடும்பத்தினர்
சென்னை:
தமிழ்நாடு தலைமைச் செயலகம் ஏக பரபரப்பில் இருக்கிறது. குறிப்பாக தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள்அறையில் நிருபர்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது.
ராஜ்குமார் இன்று எப்படியும் காட்டில் இருந்து வந்துவிடுவார் நேராக தலைமைச் செயலகத்திற்குத்தான் அழைத்து வருவார்கள்என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் நிருபர்கள்.
ஆனால், தமிழக உயர் அதிகாரிகள் தரப்பில் அனைவருமே மெளனத்தையே பதிலாக தருகிறார்கள். ராஜ்குமாரின் வருகையைநாங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள்.
இதற்கு நடுவே இன்னொரு விஷயம் பரவிக்கொண்டிருக்கிறது. ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, ராஜ்குமாரின் மகன்கள்மற்றும் சில உறவினர்கள் திங்கள்கிழமை அதிகாலை சென்னை வந்துவிட்டார்கள் என்றும், அனைவரும் ரஜினிகாந்த் வீட்டில்தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜ்குமாரின் வருகைக்காக அவர்களும் காத்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் பரவின. இதையடுத்து பத்திரிகையாளர்கள்போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கும் படையெடுத்தார்கள். அங்கேயும் உறுதியான தகவல்கள் ஏதும்கிடைக்கவில்லை. அதனால் தகவலை உறுதி செய்ய முடியாமலேயே திரும்பினார்கள்.
ரஜினி உட்பட, ராஜ்குமார் உறவினர்கள் அனைவரும் ராஜ்குமார் இன்று எப்படியும் திரும்பி விடுவார் என்று ரஜினிகாந்தின்இல்லத்தில் காத்திருப்பதாகத் தெரிகிறது.
ஏதுவுமே இப்பொழுது சொல்ல முடியாது. நாங்களும் உங்களைப்போலவே வருகின்ற தகவல்களை கேட்டுக்கொண்டிருக்கிறோம்என்கிறார்கள் அதிகாரிகள்.