நவ.25 முதல் சபரிமலை சிறப்பு ரயில்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

சபரிமலை சீசனை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 25-ம் தேதிமுதல் சென்னை - திருவனந்தபுரம் இடையே தினமும் சிறப்பு ரயில்இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஓ. ராஜகோபால்தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

சபரிமலை சீசன் விரைவில் தொடங்க உள்ளது. பக்தர்களின் வசதிக்காகசென்னைக்கும் திருவனந்தபுரத்துக்கும் இடையே தெற்கு ரயில்வே சிறப்புரயிலை இயக்கும்.

நவம்பர் 25-ம் தேதி முதல் தினசரி இந்த ரயில் இயக்கப்படும். சபரிமலைசீசன் முடியும் வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.

அதேபோல் பெங்களூர்-கோட்டயம் இடையேயும் சபரிமலை பக்தர்கள்வசதிக்காக மற்றொரு சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சபரிமலைப் பகுதியில் அமல்படுத்தப்பட உள்ள சபரி ரயில்வே திட்டம்தொடர்பான சர்வே பணி நடைபெற்று வருகிறது. பலகோடி ரூபாய்செலவில் அமல்படுத்தப்பட உள்ள இத் திட்டம் குறித்து மத்திய அரசுகூடுதல் கவனம் செலுத்தி பணிகளை முடுக்கி விட்டுள்ளது என்றார்ராஜகோபால்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+