பணவீக்க விகிதம் குறையும் - யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை
டெல்லி:
பணவீக்க உயர்வு விரைவில் குறையும் என்று நம்புவதாக மத்திய நிதி அமைச்சர்யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
டெல்லியில் 3 நாள் நடைபெற உள்ள பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டை அவர்திங்கள்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
பணவீக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. தற்போது பணவீக்கம் 7.6சதவீதமாக உள்ளது. இதற்கு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுதான்காரணம். விரைவில் பணவீக்கம் குறையும். அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசுஈடுபட்டுள்ளது.
பணவீக்கம் உள்பட மேலும் பல பிரச்சினைகள் இருந்தாலும், 7 சதவீதம் என்றுநிர்ணயிக்கப்பட்டுள்ள நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திவளர்ச்சிவிகிதம் எந்த வகையிலும் குறைக்கப்படாது.
மத்திய அரசின் முன் உள்ள பிரச்சினைகளில் பணவீக்கமும் ஒன்று. பெட்ரோலியப்பொருட்களின் விலை உயர்வால் நிச்சயம் பணவீக்கமும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்பட்டதுதான். அதனால், அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளால் நியாயமான அளவுக்கு பணவீக்கம்குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் முதல் 5 மாதங்களில் தொழில் வளர்ச்சி விகிதம் குறைவாகஇருக்கிறது என்பது உண்மைதான். மின் துறைப் பொருட்கள் உற்பத்தி, மின் உற்பத்தி,ஸ்விட்ச் கியர்ஸ், பேப்பர் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள் துறையில் வளர்ச்சிகுறைவாக உள்ளது.
விவசாயத் துறையில் போதுமான வளர்ச்சி இல்லாதது சற்று கவலை அளிக்கக்கூடியவிஷயமாகும். காரீஃப் பருவத்தில் உணவுப் பொருள் உற்பத்தி 10 லட்சம் டன்குறைந்துவிட்டது. ஆனால் கரும்பு, பருத்தி உற்பத்தி அதிகமாக இருந்ததுகுறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் மற்ற துறைகளில் எதிர்பார்த்த அளவைவிடவும், கடந்த ஆண்டைவிடவும் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது மத்திய அரசிடம் தற்போது ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 200 கோடிஅன்னியச் செலாவணி கைருப்பு உள்ளது. இம் மாத இறுதிக்குள் இது மேலும்அதிகரிக்கும். அப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருந்த அன்னியச்செலாவணி கையிருப்புடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு கையிருப்பு அதிகமாகும்.
வெளிநாட்டுக்குக் கொடுக்கவேண்டிய கடன் தொகை அளவு ரூ.1.61 லட்சம்கோடியாக உள்ளது. ஆனால், அதில் எப் பிரச்சினையும் இல்லை. விரைவில்பற்றாக்குறை அளவு 2 சதவீதத்துக்கும் கீழாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டுக்குள் போதுமான அளவுக்கு நம்மிடம் அன்னியச் செலாவணிகையிருப்பு இருக்கும் என்று நம்புகிறோம்.
பங்குச் சந்தையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் விலை மற்றும்பெட்ரோலியப் பொருட்களின் விலை ஆகியவை சற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.மேலும், அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் மேலும் பல இந்தியநிறுவனங்கள் பங்குகளை வெளியிட்டுள்ளன.
இதனால், இந்தியப் பங்குச் சந்தை வியாபாரம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. மும்பைபங்குச் சந்தையில் 6 ஆயரத்திலிருந்து 3700 ஆக புள்ளிகள் குறைந்தபோதிலும்,யாருக்கும் பாக்கி கொடுக்கவேண்டியதில்லை. பங்குச் சந்தையின் செயல்பாடுபாதுகாப்பாகவே உள்ளது என்றார் சின்ஹா.
யு.என்.ஐ.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications