மூன்று பெண்களின் கணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
சிவகங்கை அருகே மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபர்தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கைக்கு அருகே உள்ளது கருங்குளம். இங்கு சுடலைமாடன் (27) வசித்துவந்தார். இவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள்.
முதல் மனைவி இவரோடு வாழ விருப்பமின்றி இவரை விட்டு ஓடி விட்டார்.இரண்டாவது மனைவி லட்சுமி பிரசவத்தின் போது இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து இவர் மூன்றாவது முறையாக ரோஸ்மேரி என்ற பெண்ணை கடந்த ஆண்டுதிருமணம் செய்து கொண்டார்.
சுடலைமாடன் கடன் தொல்லையால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். இதனால்குடும்பத்தில் சண்டையும் நடந்து வந்தது. இவர் மனைவியும் அடிக்கடி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டிற்கு சென்றுவிடுவார். இதன் காரணமாக மன வேதனைஅடைந்த சுடலைமாடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications