வங்கதேசம்: பாலத்தை உடைத்துக் கொண்டு பஸ் கவிழ்ந்ததில் 11 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
வங்க தேச தலைநகரான டாக்காவிற்கு அருகே நடந்த விபத்தில் 11 பேர் பலியானார்கள்.
வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு வடகிழக்கே 420 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சில்ஹெட்மாவட்டத்தில் உள்ள சாட்டாத் என்ற நகர் உள்ளது.
அங்கு அமைந்துள்ள நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த பேருந்தின் ஓட்டுநர் தீடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த பேருந்துஅங்கு இருந்த பாலத்தின் தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு கீழே விழுந்தது.
இந்த விபத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர் என போலீ,ஸ்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications