அமெரி க்காவில் தீபாவளி: இந்தியர்கள் கொண்டாட்டம்
சான்டா கிளாரா (கலிஃபோர்னியா):
அமெரிக்காவில் கலிஃபோர்னியா பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர்வழக்கமான உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் தீபாவளிப் பண்டிகையைக்கொண்டாடினர்.
காற்றில் வண்ணப் பொடிகளைத் தூவி, மைக் செட்டில் ஹிந்தி பாடல்களைப் பாடி,பட்டாசுகள் வெடித்து தீபாவளியை அவர்கள் கொண்டாடினர்.
தீபாவளிப் பண்டிகை இம் மாதம் 26-ம் தேதிதான் கொண்டாடப்படுகிறது என்றாலும்அதற்கு இரு வாரங்களுக்கு முன்பே அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தீபாவளிப்பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
கலிஃபோர்னியா பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்கான எஃப்.ஐ.பி.ஏஎன்ற அமைப்பின் சார்பில் இந்தியத் திருவிழா 2000 என்ற பெயரில் இந்த தீபாவளிக்கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தியர்கள் கொண்டாடிய இந்த தீபாவளிப் பண்டிகையில் அப்பகுதியில் வசிக்கும்அமெரிக்க மக்களும் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளில் அவர்களும் கலந்து கொண்டனர் என்றுஎஃப்.ஐ.பி.ஏ. அமைப்பின் துணைத் தலைவர் சஞ்சய் சென் தெரிவித்தார். மொத்தம் 12ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications