காஷ்மீரில் ராணுவ கமாண்டர், 18 தீவிரவாதிகள் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையேநடந்த மோதலில் ஒரு ராணுவ துணை கமாண்டர், 18 தீவிரவாதிகள் உள்பட 20 பேர்கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடந்த இந்தமோதலில், 18 தீவிரவாதிகளும்,எல்லை பாதுகாப்புப்படையின் துணை கமாண்டர்உட்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பலர்காயமடைந்தனர். இதைத்தவிர ராணுவ வாகனம் ஒன்றும் சேதமடைந்தது. மேலும்எல்லைப் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரும், ராணுவ வீரரும்காயமடைந்தனர்.

திங்கள் கிழமை மாலை வடக்கு பராமுலாவிலுள்ள கானிஸ்தான் கிராமத்தில்தீவிரவாதிகளுக்கும் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் சண்டைநடந்தது. இந்த சண்டை புறக்காவல் படையினர் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தஇடத்தை சுற்றி வளைத்ததைத் தொடர்ந்து நடைபெற்றது.

தீவிரவாதிகள் கைஎறிகுண்டை எறிந்தும், தானியங்கி துப்பாக்கிகளை உபயோகித்தும்எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 61-வதுபட்டாலினைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப்படையின் துணை கமாண்டர் ரதோர்கொல்லப்பட்டார். இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள்தெரிவித்தனர்.

உதவி காமாண்டர் ராகேஷ் குமாரும் மேலும் ஒரு ராணுவ வீரரும் இதே தாக்குதலில்காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். கானிஸ்தானுக்கு கூடுதல் ராணுவ வீரர்கள்தினர்அனுப்பப்பட்டிருக்கின்றனர் . அங்கு இன்னும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தெற்கு ஆனந்தநாக்பகுதியிலுள்ள செர்வாட் கோகெரங் கிராமத்தில் நடந்த சண்டையில் 6 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.

திங்கள் கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினர் செர்வாட் கோகெர்நாகில் தீவிரதேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள்ராணுவத்தினரை நோக்கி சுட்டனர். ராணுவ வீரர்கள் திருப்பி சுட்டதில் 6 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.

ராணுவ வீரர்கள் மோர்டார் மூலமும் தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீடுகள்சேதமடைந்தன. தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உதம்பூரில் உள்ள மாஹோரில் மேலும் 8 தீவிரவாதிகள் ராணுவத்தினருடன் நடந்தசண்டையில் கொல்லப்பட்டனர். தெற்கு புலான்வாலா பகுதியில் உள்ளபாராபோராவில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+