ஆடு மேய்ப்பதைத் தடுத்த பாதிரியாருக்கு அடி
புவனேஸ்வர்:
ஒரிசா மாநிலம் கண்டாமல் மாவட்டம் பேடிகோலா கிராமத்தில் ஆடு மேய்ப்பதைத்தடுத்த பாதிரியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதட்டம்நிலவுகிறது.
கண்டாமால் மாவட்டத்தில் உள்ளது பேடிகோலா கிராமம். இங்குள்ள கிராம மக்கள்தங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குள்எடுத்துச் சென்றனர்.
அதை அங்குள்ள பாதிரியார் லாமேஸ்வர் கன்காரும். அங்கு பணிபுரியும்சமையல்காரரும் தடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை கிராமவாசிகள் சுமார் 15பேர் சேர்ந்து தாக்கினர்.
இதே போல் கால்நடை மேய்ப்பது தொடர்பான சச்சரவு சென்ற வாரமும் நடந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த பாதிரியார் கன்கார் முதலில் உள்ளூர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். அவர் உடல் நலம் மோசமடைந்ததைத் தொடர்ந்து மாவட்ட பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்கள்தலைமறைவாக உள்ளனர்.
கண்டாமல் மாவட்ட எஸ்.பி. ராணஸ் போலீஸ்படையுடன் சம்பவ இடத்தைப்பார்வையிட்டார். டி.எஸ்.பி. அந்த கிராமத்திலேயே திங்கள்கிழமை முதல்முகாமிட்டுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications