கோவா வி.எச்.பி. மாநாட்டில் ராமர் கோவில் தேதி முடிவு செய்யப்படும்
பாண்டா (கோவா)
அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணிகளைத் துவக்கும் தேதி குறித்துகோவாவில் நடக்கும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் பிராந்திய மாநாட்டில்தீர்மானிக்கப்படவுள்ளது. செவ்வாய்க்கிழமை இந்த கூட்டம் துவங்குகிறது.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் "தர்ம சன்சத் தினுடைய மத்திய ஆலோசனைக்குழுவான "கேந்திரிய மர்காதர்ஷத் தின் கூட்டம் செவ்வாய்கிழமை கூடுகிறது. இதில்,ராமர் கோவில் கட்டும் பணி குறித்த தேதி உட்பட பல விஷயங்கள் குறித்துவிவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் 200 மதத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தேதியை முடிவுசெய்வது குறித்தே முக்கிய விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவாவில் நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கானதிட்டம் குறித்து முடிவு செய்யப்பட்டு, அலகாபாத்தில் 2001-ல் நடக்க இருக்கும்பூர்ணகும்ப மேளாவுக்கு முன் "தர்ம சன்ஸத் கவுன்சிலிடம் சமர்பிக்கப்படும் எனவிஷ்வ இந்து பரிஷத்தின் செய்தித் தொடர்பாளர் கோமாந்தக் தெரிவித்தார்.
தர்மாச்சாரியர்கள், ஜகத் குருக்கள், மகாமண்டேஸ்வரர், ஸ்ரீ மகான்கள் மற்றும் பல மதத்தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில், புதிய நூற்றாண்டில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கோவிலை நிர்வகிப்பது குறித்தும், கங்கைநதியின் புனிதத்தன்மையை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும் முடிவுசெய்யப்படும்.
யு.என்.ஐ.