சூழ்ச்சி செய்கிறார் ராமதாஸ்: தாழ்த்தப்பட்டோர் புகார்
சேலம்:
தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை மாற்றி, பிரித்தாளும் சூழ்ச்சியை பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் செய்து வருகிறார் என குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு தமிழரசன் தெரிவித்தார்.
சேலத்தில் குடியரசுக் கட்சித் தலைவர் தமிழரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியாவது:
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த இட ஒதுக்கீட்டை பிரித்து அருந்ததியர், ஆதிதிராவிடர் மற்றும் தேவேந்திரர் ஆகிய முன்றுபிரிவினர் இல்லாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்ராமதாஸ் கோரி வருகின்றார்.
அவ்வாறு இட ஒதுக்கீட்டைப் பிரித்தால் குடியரசுக் கட்சி மாபெரும் போராட்டத்தை நடத்தும்.மேலும், தமிழகம் முழுவதிலும் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமீட்பு நிலங்களாக உள்ளன. இந்தநிலங்களைப் பிரித்து ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
அவ்வாறு நிறைவேற்றத் தவறினால் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பட்டம், பேரணி, போராட்டம்நடத்த குடியரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.
இவ்வாறு செ.கு தமிழரசன் தெரிவித்தார்.