சாம்-பி-ரா-ணி காட்-டிய பெண் தீயில் க-ரு-கி பலி
கோவை:
கோவை அருகே குழந்தைக்கு சாம்பிராணி புகை காட்டியபோது ஏற்பட்ட தீ விபத்தில்தாய் பலியானார். பாட்டி மற்றும் குழந்தை இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கோவை அருகே பொள்ளாச்சி அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டியில் குடியிருந்துவருபவர் நம்பிராஜன். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி அருகே உள்ள குன்னத்-தூர்.இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் 7 மாதத்தில் ஒரு குழந்தையும் உண்டு. இவரதுமனைவி அமுதா மற்றும் அமுதாவின் தாயார் அய்யம்மாள் ஆகியோர் குழந்தையைக்கவனித்து வந்தனர். இந்நலையில் அக்டோபர் 16ம் தேதி குழந்தையை குளிப்பாட்டிவிட்டு சாம்பிராணி புகை காட்ட அமுதா தயாரானார்.
அப்போது சாம்பிராணி எரியாமல் இருந்துள்ளது. இதனை தனது வாயால் ஊதிபுகையை அதிகப்படுத்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரதுபுடவையில் தீ குபீரெனப் பிடித்தது.
இதில் அவரது தாயார் அய்யம்மாள் மீது தீ பரவியது. இதனை கண்டு அதிர்ந்த அமுதாஇருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் அமுதா அதிக காயம் அடைந்தார்.பின்னர் அவரும் பொள்ளாச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அமுதாசிகிச்சை பலனின்றி இறந்தார். குழந்தையும், அய்யம்மாளும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications