தேர்தல் சின்னங்களாக விலங்குகளை பயன்படுத்த எதிர்ப்பு
சென்னை:
தேசிய பறவைகளான விலங்கு, பறவை, மலர்கள் போன்றவற்றை தேர்தல்சின்னங்களாக பயன்படுத்துவது நமது தேசத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தும் எனமூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கருத்து கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் குமரிஅனந்தன் அரசியில் பொது வாழ்வில் பொன் விழா நிகழ்ச்சிதிங்கள்கிழமை பாண்டிச்சேரிமுதல்வர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்தவிழாவில் குமரிஅனந்தன் பேசியதாவது:
மதுரை கல்லூரியில் நான் பேராசிரியராக பணியாற்றி வந்த போது நடந்த விழா ஒன்றில்நான் பேசியதைக் கேட்ட காமராஜ் என்னை சென்னைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார். அதன்படி நான் அவரை சென்னையில் சந்தித்தேன். அவர் எனக்குஇளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்தார்.
பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றி நான், கங்கை நீரை குமரிக்கு கொண்டுவரமுயற்சி மேற்கொண்டேன். அப்போதைய பிரதமர் நேரு அதை கொள்கை அளவில்ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அதைமறந்துவிட்டனர்.
விரைவில் பனைத் தொழிலாளிகள் தயாரிக்கும் பனைப் பொருட்களை ஏற்றுமதிசெய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்தவிருக்கிறேன்.
தேசிய விலங்கு, பறவை, மலர் போன்றவற்றை தேர்தல் சின்னமாக பயன்படுத்துவதுநமது தேசத்திற்க பெரிய அவமானமாகும். அதை தடுக்க வேண்டும் என அவர்பேசினார்.