பாராலிம்பிக் போட்டிகள்: சிட்னியில் கோலாகலமாகத் தொடங்கின

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

உடல் ஊனமுற்றவர்களுக்கான 11-வது ஒலிம்பிக் போட்டிகள்(பாராலிம்பிக்) சிட்னியில் புதன்கிழமை தொடங்கின.

மழை மற்றும் கடுங் குளிருக்கு இடையே தொடக்கப் போட்டிகள் சிறப்பாகநடைபெற்றன.

கடந்த மாதம்தான் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் சிட்னியில்நடைபெற்று முடிந்தன. அதைத் தொடர்ந்து இப்போது பாராலிம்பிக்போட்டிகள் நடைபெற உள்ளன.

11 நாள் நடைபெற உள்ள இப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த3,823 பேர் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 550 பதக்கங்கள்வழங்கப்படவுள்ளன.

சிட்னி ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் 1 லட்சம்பேர் கண்டுகளித்தனர். தொடக்க விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித்தலைவர் சாமரான்ச் கலந்து கொண்டார்.

தொடக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில்6 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் 2 ஆயிரம் பள்ளிச்சிறுவர்களும் அடங்குவர்.

கடந்த முறை அட்லாண்டாவில் நடந்த பாராலிம்பிக் போட்டியை விடஇந்த பாராலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கானமுயற்சிகளை சிட்னி ஒலிம்பிக் கமிட்டி மேற்கொண்டுள்ளது.

பாராலிம்பிக் போட்டிக்கான ஜோதியை ஆஸ்திரேலியாவின்சக்கரநாற்காலி பந்தய வீரர் லூயிஸ் சாவேஜ் ஏற்றி வைத்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+