பா.ம.க.வின் தபால் பெட்டி நிரப்பும் போராட்டம்
சென்னை:
தபால் துறைக்கு எதிராக தபால் பெட்டிகளில் தபால்களைப் போட்டு நிரப்பும்போரட்டத்தில் ஈடுபடப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்துள்ளது.
இது பற்றி அக்கட்சியின் மாநில பொருளாளர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்வருமாறு:
சென்னையில் உள்ள உள்ளூர் தபால் நிலையங்களில் தபால்களைப் போட்டால் அவைதமிழ்நாட்டில் உள்ள மற்ற நகரங்களை சென்று அடைய 15 நாட்கள் ஆகின்றன.
தபால்களை மொத்தமாக போடுவதற்காக ஆர்.எம். எஸ் ( ரயில்வே மெயில் சர்வீஸ்)அலுவலகத்துச் சென்றால் எங்களை அங்குள்ள தபால் ஊழியர்களும், அதிகாரிகளும்,உங்கள் பகுதியில் உள்ள தபால் நிலையத்திலோ அல்லது தலைமை தபால்நிலையத்திலோ தபால்களை போடுங்கள் என திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
இது போன்ற முறைகேடான நடவடிக்கையை தடுக்க தபால் துறை நடவடிக்கைஎடுக்காவிட்டால் பா.ம.க. சாப்பில் தபால் பெட்டி நிரப்பும் போராடம் நடைபெறும்என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications