நெடுமாறனுக்கு சோனியா கண்டனம்
ரெய்ச்சூர் (கர்நாடகம்):
விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளவர்களைநடிகர் ராஜ்குமாரை மீட்பதற்கான தூதராக அனுப்புவது தவறானது என்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடிகர்ராஜ்குமாரை மீட்கப் போகும் தூதுக் குழுவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும்தமிழ்த் தீவிரவாத அமைப்புகளூடன் தொடர்பு உள்ளவர்கள் இடம் பெற்றிருப்பதாககூறப்படுவதில் உண்மை உள்ளது.
கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசுக்கும், இதற்கும் தொடர்பில்லை.இத்தககையவர்கள் தூதுக் குழுவில் இடம்பெற்றதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுகாரணமல்ல.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு தண்டனை கிடைத்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிஅவரைக் கைவிடவில்லை. அவர் சட்டரீதியாக போராடி வருகிறார். தனிப்பட்டமுறையில் காங்கிரஸ் கட்சிக்கு அவர் மீது அனுதாபம் உள்ளது என்றார் சோனியா.
ராஜ்குமார் மீட்புக் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழ் தேசிய இயக்கத் தலைவர்நெடுமாறனுக்கு விடுதலைப் புலிகளுடனும், புதுவை சுகுமாறனுக்கு தமிழ்த்தீவிரவாதிகளுடனும் தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.