கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயலலிதாவால் நிற்கமுடியாது- ஸ்டாலின்
கரூர்:
சட்டமன்றத்தேர்தல் மட்டுமல்ல பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயலலிதா போட்-டியிடமுடியாது என்று கரூரில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சென்னை மேயர் ஸ்டாலின்கூறி-னார்.
கரூர் வெங்கமேட்டில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சென்னை மேயரும்முதல்வர் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
தி.மு.கவின் இந்த முப்பெரும் விழா-சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கொண்டுஅமைச்சர் செங்குட்டுவன் பேசும் பொழுது டூ ஆர் டை என்றார். நான் அவர் பேசியதில் உள்ளஆர் என்ற எழுத்தை எடுத்துவிட்டு டூ அண்ட் டை என்று கூறுகிறேன். அதாவது செய் அல்லதுசெத்துமடி என்பது சரியல்ல, செய்து முடித்துவிட்டு செத்துமடி என்பது தான் சரி யானது.
இங்கு வந்த பலரும் என்னை வருங்கால முதல்வர் என்று கூறினார்கள். அப்படிச்சொன்னவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நம்முடைய நிரந்தர முதல்வர் கலைஞர் தான். தனி நீதிமன்றம் டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்திருக்கிறது.
இது போக இன்னும் பல வழக்குகள் பாக்கியிருக்கிறது. இதற்கு எல்லாம் தண்டனைகள் கிடைக்கும்.அந்த தண்டனைகள் கிடைக்கும் பொழுது சட்டமன்றத்தேர்தலில் மட்டுமல்ல, பஞ்சாயத்து கவுன்சிலர்தேர்தலில் கூட ஜெயலலிதாவால் நிற்கமுடியாது பேசினார் மு.க.ஸ்டாலின்.