இஸ்ரேலை ஆதரித்ததால் அமெரிக்க போர்க் கப்பல் மீது தாக்குதல் .. தீவிரவாதிகள்
துபாய்:
ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல் மீது நடத்தப்பட்டதாக்குதலுக்கு கவாத் அல்-ராத் அல்-இஸ்லாமியா என்ற அமைப்புபொறுப்பேற்றுள்ளது.
இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்தால் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்என்றும் அந்த அமைப்பு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத் தகவலை துபாய் தொலைக்காட்சி தெரிவித்தது. ஏடன் துறைமுகத்தில் எரிபொருள்நிரப்பிக் கொண்டிருந்த அமெரிக்க போர்க் கப்பலான யு.எஸ்.எஸ்.கோல் என்ற கப்பல்மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் 17 பேர் பலியானார்கள்.
தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உளவுப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். பல நாட்கள் திட்டமிட்டு இத் தாக்குதல்நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந் நிலையில், அத் தாக்குதலுக்கு மேற்கண்ட கவாத் அல்-ராத் அல்-இஸ்லாமியாஅமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவுக்குஎச்சரிக்கை விடும் நோக்கில்தான் இத் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்புகூறியதாக துபாய் தொலைக்காட்சி தெரிவித்தது.
தொடர்ந்து இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தால் தொடர்ந்து இதுபோன்றதாக்குதலை நடத்துவோம் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. அரேபியாவிலும்,இஸ்லாமிய நாடுகளிலும் அமெரிக்க ராணுவம் நுழைவதை எதிர்த்து நாங்கள் புனிதப்போர் தொடங்கியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்க போர்க் கப்பல் மீதான தாக்குதலுக்கு ஜெய்ஷ் மொகம்மது என்ற அமைப்பும்பொறுப்பு ஏற்றுள்ளது. அதுவும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுப்பதற்குஎதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.