சென்னையில் பல்கலை. துணைவேந்தர்கள் மாநாடு
சென்னை:
தென் மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும்கல்வியாளர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு சென்னையில் வெள்ளிக் கிழமை(20-ம்தேதி) நடைபெறுகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தபல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளும் 2 நாள் மாநாடு சென்னையில்வெள்ளிக் கிழமை துவங்குகிறது. இதில் மொத்தம் 67 துணைவேந்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
மாநாட்டை மாநில ஆளுநர் பாத்திமா பீவி துவக்கி வைக்கிறார்.
தென் மாநிலங்களைச் சேர்ந்த பிரபல கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள்ஆகியோரும் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சென்னை போரூர்ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக் கிழமை காலை தொடக்க விழாநடைபெறுகிறது.
இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை வகிக்கிறார்.ராமச்சந்திரா மருத்துவ நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம்,துணைவேந்தர் டி.கே.பார்த்தசாரதி, பதிவாளர் ராதா வெங்கடாசலம் ஆகியோர்பேசுகின்றனர். மாநாட்டில் உயர் கல்வியில் உள்ள சவால்களும், வாய்ப்புகளும் பற்றிவிவாதிக்கப்படுகிறது.