தொழில் தொடங்க வாருங்கள் ...ஜெர்மனி அழைக்கிறது

Subscribe to Oneindia Tamil

கலோன் (ஜெர்மனி):

தங்கள் நகரில் தொழில் தொடங்க வாருங்கள் என்று இந்திய நிறுவனங்களுக்குஜெர்மனியில் உள்ள சிறிய நகரான எஷ்வீலர் அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில் தொடங்கும்படி அந் நகரம்கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக பேச்சு நடத்த வரும்படி ஜெர்மனியில் கலோன் நகரில் உள்ள இந்தியதொழிலகக் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) மண்டல இயக்குநர் மோகன் மூர்த்தியைஎஷ்வீலர் நகர மேயர் ரூடி பெர்ட்ராம் அழைப்பு விடுத்துள்ளார்.

சி.ஐ.ஐ. உடன் தொழில் உறவு வைத்துக் கொள்ளவும், அந்த உறவை மேம்படுத்தவும்எஷ்வீலர் நகரம் விரும்புகிறது. அந்த வகையில், எஷ்வீலர் பகுதியில் தொழில்தொடங்குவது குறித்து இந்திய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தும்படி சி.ஐ.ஐ.அமைப்பை ரூடி பெர்ட்ராம் கேட்டுக் கொண்டுள்ளார்.

எஷ்வீலர் நகரில் தொழில் தொடங்க வரும் இந்திய நிறுவனங்களுக்குத் தேவையானஅனைத்துவிதமான உதவிகளையும் செய்து தர எஷ்வீலர் நகரம் தயாராக உள்ளது.வேண்டுமானால், ஒரு தொழிற் பூங்காவையும் ஏற்படுத்தித் தர தயாராக உள்ளோம்என்றார் ரூடி பெர்ட்ராம்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+