தொழிற்சாலை ஊழியர்களுக்கு ரூ. 500 உதவித் தொகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மூடப்பட்டு கிடக்கும் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு தீபாவளியைமுன்னிட்டு ரூ.500 உதவித் தொகை வழங்க முதல்வர் கருணாநிதிஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாட்டில் நீண்டகாலமாக மூடப்பட்டு இயங்காமல் உள்ள தொழிற்சாலைகளில்பணிபுரிந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஆண்டு போலவே இந்தஆண்டும் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 500ரூபாய் வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையின் மூலம் 14 ஆயிரத்து 51 தொழிலாளர்களுக்கு 500 ரூபாய் வீதம்மொத்தம் 70 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றுஅரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications