காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 2,500 பேருக்கு மேல் சாவு
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் வன்முறைக்கு இந்தஆண்டில் இதுவரை 2,500-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக மாநிலசட்டப்பேரவையில் நடந்த சிறப்பு விவாதத்துக்கு மாநில உள்விவகாரத் துறை இணைஅமைச்சர் முஷ்டாக் அகமத் லோன் கூறியதாவது:
மாநில அரசிடம் உள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கடந்த ஒன்பதை மாதத்தில்1,210 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதே காலகட்டத்தில் 730 பொதுமக்களும், 635 ராணுவம், துணை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையைச்சேர்ந்தவர்களும் பலியாகியுள்ளனர்.
தீவிரவாதிகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதுதான் நிறைய ராணுவத்தினர்பலியாகியுள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கையுடன்ஒப்பிடும்போது பலியான ராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் 2 தீவிரவாதிகளுக்கு ஒரு ராணுவ வீரர் பலியாகியுள்ளார். ஆனால்,1990-ம் ஆண்டுகளில் 8 தீவிரவாதிகளுக்கு ஒரு ராணுவ வீரர்தான் பலியானார்.
இப்போது தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகமாகியிருப்பதும், தீவிரவாதிகளைத்தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதும் இதற்குக் காரணமாகும் என்றார் முஷ்டாக்அகமத் லோன்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications