சதி செய்கிறார்கள் .. சாதனை மங்கை மல்லேஸ்வரி குமுறல்
டெல்லி:
எதிர்காலத்தில் நான் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளமுடியாத வகையில்சதிகாரர்கள் எனக்கு எதிராக குழிபறிக்கின்றனர் என்று பளுதூக்கும் வீராங்கனைமல்லேஸ்வரி தெரிவித்தார்.
சமீபத்தில் சிட்னியில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே ஒருவெண்கலப் பதக்கம் கிடைத்தது. அப்பதக்கத்தைப் பெற்றுத் தந்தது பளுதூக்கும்போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட கர்னம்மல்லேஸ்வரிதான்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப்பெற்றது மட்டுமல்லாமல் ஒரு பதக்கத்தை வென்று தந்து சிட்னி ஒலிம்பிக்கில்இந்தியாவின் மானம் காத்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கம் வென்று தந்த அவருக்கு பல மாநில அரசுகளும் பாராட்டு விழா நடத்திபரிசுகளை வழங்கி கவுரவித்தன. பல பெரிய தொழில் நிறுவனங்களும் அவரைப்பாராட்டி பரிசு வழங்கியுள்ளன.
சமீபத்தில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய பாராட்டு விழாவில் கர்னம்மல்லேஸ்வரி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:
சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணியில் இடம் பெறவே நான்கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. நான் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளக்கூடாதுஎன்று பலர் சதி செய்தனர்.
இருப்பினும் நான் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு ஒரு பதக்கத்தை வென்றேன்.இந்தியாவுக்குக் கிடைத்த ஒரே பதக்கம் அதுதான் என்பதை நினைத்து நான் மிகவும்மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே எதிர்காலத்தில் நடைபெற போட்டிகளில் நான்கலந்து கொள்வதற்கு எதிராக அதே சதிகாரரர்கள் சதி செய்து வருகின்றனர்.
அதனால், எதிர்காலத்தில் நடைபெற உள்ள போட்டிகளில் நான் இந்தியாவின் சார்பில்கலந்து கொள்ள முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்படுகிறேன்.
சிட்னி ஒலிம்பிக்குக்குப் பிறகு ஓய்வு பெற நான் திட்டமிட்டேன். ஆனால், எனதுகுடும்பத்தினரும், பயிற்சியாளரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எனது ஓய்வுபெறும் முடிவை நான் மாற்றிக் கொண்டேன்.
முடிந்தவரை நான் போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கவிரும்புகிறேன். எனக்கு எதிராக சதி நடைபெறுகிறது.
அதனால், 2002-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசியப் போட்டியில் கலந்துகொள்வதற்கான பயிற்சியை நான் இன்னும் தொடங்கவில்லை.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள முதல் ஆப்பிரிக்க-ஆசியப் போட்டியிலும், உலகபளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும் கலந்து கொள்ள விரும்புகிறேன்.
இப்போதைய எனது எண்ணமெல்லாம் பளுதூக்கும் அகாதெமி அமைப்பதுபற்றித்தான். அந்த அகாதெமி அமைந்துவிட்டால் எதிர்கால வீரர், வீராங்கனைகள்என்னைப் போல் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடாது.
பளுதூக்கும் அகாதெமிக்கான நபர்களை நானே இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம்செய்து தேர்ந்தெடுப்பேன். அவர்களுக்கு நன்றாகப் பயிற்சி அளித்து சர்வதேசப்போட்டிகளில் வெற்றி பெற வைப்பேன் என்றார் மல்லேஸ்வரி.
யு.என்.ஐ.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications