சவால் தஸ் குரோர் கா - அக். 23 முதல் ஒளிபரப்பு
மும்பை:
ஸ்டார் டிவியின் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்குப் பதில் தரும்விதத்தில் ஜீ டிவி வழங்கப் போகும் சவால் தஸ் குரோர் கா நிகழ்ச்சிஅக்டோபர் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
வாரம் தோறும் மூன்று நாட்களுக்கு (திங்கள், செவ்வாய், வியாழன்) இரவு8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று ஜீ டிவி அறிவித்துள்ளது.இந்தப் போட்டியில் பங்கேற்போருக்கு அதிகபட்சம் ரூ. 10 கோடி பரிசுஅளிக்கப்படும்.
பிரபல இந்தி நடிகர் அனுபம் கர் சவால் தஸ் குரோர் கா நிகழ்ச்சியைநடத்துவார். முதலில் மாதுரி தீக்ஷித் இந்த நிகழ்ச்சியை நடத்துவார் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அனுபம் கர் நடத்தவுள்ளார்.இருப்பினும் அனுபம் கருடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளில் மாதுரி தீக்ஷித்தைநடத்த வைக்க ஜீ டிவி திட்டமிட்டுள்ளது.
துவக்க சுற்றுப் போட்டிகளில் பங்கேற்போரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புஎர்ன்ஸ்ட் அன்ட் யங் அமைப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தநிகழ்ச்சியில் பங்கேற்க 20 லட்சம் பேர் வரை விருப்பம் தெரிவித்துள்ளதாகத்தெரிகிறது.
போட்டியில் கலந்து கொள்ள முதலில் 21 பேர் தேர்வு செய்யப்படுவர்.அவர்களிலிருந்து 3 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாவர். இந்த மூன்றுபேருக்கும் தலா ரூ. 10,000 மதிப்புள்ள தங்க நாணயம் வழங்கப்படும்.பங்கேற்கும் ஒவ்வொருவரும், சரியான பதிலைச் சொல்லும்போது முதலில்10 புள்ளிகள் வழங்கப்படும். பின்னர் அது பத்தின் மடங்காகஅதிகரிக்கப்படும். அதாவது, 10, 100, 1000 ...என்று.
இறுதிச் சுற்றில் கலந்து கொள்ளும் மூன்று பேரில் அதிக புள்ளிகளைப் பெறும்போட்டியாளர், அனுபம் கருடன் இறுதிக் கேள்விச் சுற்றுக்கு தகுதி பெறுவார்.இதில் பரிசுத் தொகை ரூ. 10,000த்திலிருந்து துவங்கும். புள்ளிகள்1000த்திலிருந்து துவங்கும். இதிலும் பத்தின் மடங்காகவே புள்ளிகள்அதிகரிக்கும். பரிசுத் தொகையும் பத்தின் மடங்காகவே இருக்கும்.
அதாவது, முதல் கேள்விக்கு ரூ. 10,000 பரிசு பெற்றால், இரண்டாவதுகேள்விக்கான பரிசு ரூ. 1 லட்சம் ஆகும். 3-வது கேள்விக்கான பரிசுத் தொகைரூ. 10 லட்சம். ஐந்து கேள்விகள் கேட்கப்படும். அனைத்தையும் சரியாகச்சொன்னால் அவர்தான் பத்து கோடிக்குச் சொந்தக்காரர்.
கோன் பனேகா குரோர்பதியைப் போலவே இந்த நிகழ்ச்சியிலும் ஹெல்ப்ன்ைஉண்டு.
சரியான போட்டிதான்!
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications