ரூ. 2 கோடியில் புதுப்பிக்கப்படும் சமயபுரம் கோவில்
திருச்சி:
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 2 கோடி செலவில்புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் இத்தகவலைத்தெரிவித்துள்ளார். திருச்சி அருகே புல்லம்பாடி என்ற இடத்தில், அருள்மிகுசிதம்பரேஸ்வரர்-குளுந்தாளம்மன் கோவிலில் புதிய திருமணக் கூடத்திற்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழ்க்குடிமகன் பேசியதாவது:
மாநிலத்திலுள்ள அனைத்துக் கோவில்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்துதரப்படும். சாலை வசதி, தெருவிளக்குகள், வர்த்தக வளாகங்கள் மற்றும் பக்தர்கள்தங்கும் விடுது ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும்.
மாநிலத்தில் கோவில் வளாகங்கள் மற்றும் கோவில்களைச் சுற்றிலும் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவில்நிலங்களில் வாடகைக்கு இருந்து வருபவர்கள் உடனடியாக தங்களது பாக்கித்தொகையை கோவில் நிர்வாகத்திடம் செலுத்த வேண்டும். இதன் மூலம்கோவில்களுக்குத் தேவாையன அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியும்.
ஆண்டுக்கு 595 கோவில்களில் தற்போது கும்பாபிஷேகம் நடந்து வருகிறது. ஆனால்கடந்த அதிமுக ஆட்சியில் 165 கோவில்களுக்கு மட்டுமே கும்பாபிஷேகம் நடந்தது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோவிலில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகம்நடத்தப்படும்.
கிராம கோவில் பூசாரிகளுக்கு பென்ஷன் வழங்குவது குறித்து அரசு அக்கறைகாட்டுவதில்லை என்று இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன் கூறுவதில்உண்மையில்லை.
1500 கிராம கோவில் பூசாரிகள் பென்ஷன் வழங்குவதற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 1099 கிராம பூசாரிகளுக்கு பென்ஷன்வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு கோவிலுக்கு ஒரு விளக்கு என்ற திட்டத்தின் கீழ் கோவில்களுக்கு ஒரு மின்விளக்கு வசதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மின் விளக்குக்குத் தேவையானமின்சாரம் இலவசமாகவே வழங்கப்படும் என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.