விஷவாயு விபத்து: 3 அதிகாரிகள் கைது
சேலம்:
சேலம் அருகே விஷவாயு விபத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாகதொழிற்சாலையின் நிர்வாக அதிகாரிகள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சேலம் அருகே உள்ள பொட்டனேரியில் தேனிரும்புத் தொழிற்சாலைஉள்ளது. இந்த தொழிற்சாலை சில நாட்கள் மூடப்பட்டிருந்தது. பின்னர்இதனைத் திறந்து சுத்தம் செய்யப்பட்டபோது, பர்னசில் தேங்கியிருந்தகார்பன் மோனாக்சைடு என்ற வாயு தாக்கியது.இதில், செந்தில்குமார்,முருகன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் இறந்தனர்
இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர்சி.பி.பெய்ட் (47), பொது மேலாளர் பி.எஸ்.,பிரசாத் (60), துணைப் பொதுமேலாளர் ஜெயப்பிரகாஷ் (28), ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.இவர்கள், விபத்து நேர கவனக்குறைவாக செயல்பட்டதாகக் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
304 ஏ பிரிவின் கீழ் கைதான இவர்களை சிறையில் வைக்க மாஜிஸ்திரேட்உத்தரவிட்டார். பின்னர், மூவரும் ஜாமீனில் உடனடியாக விடுதலைசெய்யப்பட்டனர்.